- Details
-
Hits: 427
.JPG)
யாழ்ப்பாணத்தின் முக்கியமான மகளிர் பாடசாலையாக உள்ள வேம்படி மகளிர் உயர்தரப் பாடசாலை வண. பெர்சிவெல் அவர்களால் 1838ஆம் ஆண்டு மகளிர் விடுதிப் பாடசாலையாக ஆரம்பிக்கப்பட்டது. அப்போது பெண்கள் கல்வியை முன்னெடுப்பதில் பல சிக்கல்கள் இருந்தன. அவற்றையெல்லாம் எதிர்கொண்டு நடாத்தப்பட்ட அவ்விடுதிப் பாடசாலை, 1851ஆம் ஆண்டில் ஒரு காணியில் பாடசாலையாக ஒரு கட்டடத்துடன் ஆரம்பிக்கப்பட்டது. பெண்கள் பிரிவாக இதுவும், பிற்காலத்தில் 1908இல் ஆண்கள் பிரிவும் ஆரம்பிக்கப்பட்டன. (அதுவே 1910இல் யாழ் மத்திய கல்லூரியானது.) 1910களில் மாணவிகள் எண்ணிக்கை அதிகரித்தது. பறங்கியரே கற்றுவந்த நாளை மாறி, சுதேசிகளும் கற்க தொடங்கினர். விடுதியும் விஸ்தரிக்கப்பட்டது. 1916இல் பழைய மாணவியர் சங்கம் உருவானது. வேம்படியே நாட்டின் முதலாவது மகளிர் விடுதிப் பாடசாலையாகும் தற்போது ஏறத்தாழ 2000 மாணவியரும், 100 ஆசிரியரும் இங்கே உள்ளனர்.