- Details
-
Hits: 85
ஆடி மாதத்தில் திருமண முகூர்த்தநாட்கள் இல்லை என்பதால் பூக்கள் வியாபாரம் மந்தமாக காணப்பட்டது. தற்போது ஆவணி முதல் நாளிலிருந்தே மல்லி,கனகாம்பரம் பூக்களின் விலை கிடுகிடுவென உயர்த்தப்பட்டுள்ளது. கடந்த வாரம் மல்லிகை ரூ.150க்கு விற்பனையானது தற்போது இரண்டு மடங்காக 300 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. இந்நிலையில் பூ விலை உயர்வு குறித்து பூ வியாபாரிகள் சங்கத் தலைவர் சோ.ராமச்சந்திரன் கூறுகையில், மல்லிகை பூ விலை கிலோவுக்கு ரூ. 300. பிச்சிப்பூ- 250. சம்பங்கி-180, செவந்திப்பூ- 120, ரோஜா- 150, அரளி- 70, வாடாமல்லி- 50, கோழிக்கொண்டை- 40 முதல் 50 வரை, முல்லை - 240, கனகாம்பரம்- 450. கோழிக்கொண்டை ரூ.30, முல்லை ரூ.150, கனகாம்பரம் ரூ.150 முதல் 200 வரை விற்கப்படுகிறது என்றார்.