- Details
-
Hits: 74
தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் நடத்தி வரும் தாக்குதலை கண்டித்து நாடாளுமன்றம் வளாகத்தில் திமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள் இன்று நடத்துவதாக அறிவித்திருந்த தர்ணா போராட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளது.
டெசோ மநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மனங்கள் நிறைவேற்ற இந்திய அரசு உதவ வேண்டும், போன்ற கோரிக்கைகளை வலியுருத்தி திமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள் பிரதமரை சந்தித்து மனு அளித்திருந்தனர். இதனையடுத்து இன்று நாடாளுமன்றம் முன்பாக தர்ணா போராட்டம் நடத்த முடிவெடுத்திருந்தனர். எனினும் இந்த போராட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளது. ரத்து செய்யப்பட்டதிற்கு இரண்டு முக்கிய காரணங்களாக கூறப்படுகிறது. இலங்கை கடற்படையினரால் சிறைப்பிடிக்கப்பட்ட மீனவர்கள் விடுவிக்கப்பட்டதும், பிரதமர் மனுவில் அளிக்கப்பட்ட கோரிக்கைகளின் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்திருந்தார். இதன்காரணமாகவும் தர்ணா போராட்டம் கைவிடப்பட்டது என திமுக தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.