- Details
-
Hits: 492
மனித அறிவுக்கலாசாரத்தின் முக்கிய பகுதி மெய்யியலையும், விஞ்ஞானத்தையும் உள்ளடக்கியுள்ளது.மெய்யியலானது உலகில் தோன்றிய அனேகமான நாகரீகங்களிலும் காணப்பட்டதாக விளங்குகின்றது.இம் மெய்யியலின் தன்மை உலக வரலாற்றில் மிகப்பெரும் புகழைப் பெற்றிருந்தது என்று கூறுவதில் ஐயமில்லை. மெய்யியல் என்பது நடுசிந்தனை போக்காகும் இது கி.முன் காலத்திலிருந்தே வளர்ச்சி பெற்று காணப்படுகின்றது. கிரேக்கத்தில் தோன்றிய மேலத்தேய மெய்யியலே இன்றளவும் அனைவராலும் வியக்கத்தக்க ஒன்றாகக் காணப்படுகின்றது.
மெய்யியலைப் பற்றிய நாம் தெரிந்து கொள்வதற்கு முன் இதனுடைய சொல்லாக்கத்தினை நோக்குவது முக்கியமானதாகும். மெய்யியல் என்பது மெய்+இயல் எனப்தாகும். மெய் என்றால் உண்மையென்றும் இயல் என்றால் கற்கை நெறியென்றும் கொண்டும் நோக்கப்படுகின்றது.அதாவது உண்மையைக் கண்டறிதல் எனக் கூறப்படுகின்றது.இச் சொல்லானது.கிரேக்க மொழியிலிருந்த சொற்கள் இரண்டிலிருந்து.தோன்றியதாகும் philo அறிவு சார்ந்ததாக வருகின்ற இன்பச் சிந்தனையை சார்ந்தது Sophia நாணம்(உயர் நிலைப் பண்பு)எனும் இரு சொற்களில் இருந்து இணைந்தது ஆங்கிலத்தில் philosophy என பெயர் கொண்டது இச் சொல்லானது கிரேக்க மொழியில் பெண்பால் சொல்லாக காணப்படுகினறது. (philosophia)
இவ் மெய்யியல் சிந்தனையானது தோற்றம் பெற்வுடன் உலகில் சிந்தனைப் போக்குகள் அதிகம் மாற்றம் பெற்றது.இது "சிந்திக்க தெரிந்த மனிதன் எவனும் மெய்யியலைக் கற்கலாம்" என்கின்ற சிந்தனைகளை உருவாக்கியது.இது ஒரு சிந்தனைப் போக்காக தொழிற்படுகின்றது.
அடுத்து வரும் பகுதியில் மெய்யியலின் பிரிவுகள் எவையெனவும் அதன் தோற்றம், வளர்ச்சி மெய்யியலை தொற்றுவித்தவர்,அதனை வரையறை செய்தவர்களையும் நோக்குவோம்......