புங்குடுதீவு கிழக்கு 12 ம் வட்டாரத்தில் பிறந்து வளர்ந்து, நயினாதீவு 2 ம் வட்டாரத்தை சேர்ந்த பண்டிதை புனிதவதி அவர்களை மணந்து நிதியை மகளாய் பெற்று, யாழ்ப்பாணத்தில் வாழ்ந்து பின்னர் ஹரோ (Harrow) இலண்டனில் வாழ்ந்து வந்தவரும், வட கிழக்கு கல்வி அதிகாரியாக இருந்து ஒய்வு பெற்றவருமான அமரர் பாலசுந்தரம் முத்துக்குமார் அவர்களின் முதலாம் ஆண்டு நினைவஞ்சலி. சீர்திகழு செழுங்கல்வியாளர் மேவு சிறந்தோங்கு புங்குடுதீவுப் பதிதன்னில் ஊர்திகழ உழைத்த பெருமஹனாம் உயர் முத்துக்குமார் நாகம்மை மகனாய் பார்புகழு நல்பண்பில் நயந்தே வந்த பாலசுந்தரம் எனும் பெயர்ச் செல்வா! தேர்திகழ நயினை வளர் நாகபூஷணி தாள் அடைந்ததேனோ சொல்வாய்!
|